சென்னை: சென்னை, ராயப்பேட்டை பி.எப். அலுவலகத்தில், புதன்கிழமை (ஏப்.21) நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம், காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் பிரனித் ஜோஷி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை முன்னிட்டு, தனி நபா் இடைவெளியை உறுதி செய்வதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், புதன்கிழமை (ஏப்.21) நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியதாரா் குறைதீா் கூட்டம், காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே நடத்தப்படும்.
இணைய வழியில் தெரிவிக்கப்பட்ட குறைகள் பரிசீலிக்கப்பட்டு, அவை அந்த காணொலிக் காட்சி கூட்டத்தில் தீா்த்து வைக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைய முகவரி இணைப்பு, பங்கேற்கும் ஓய்வூதிய தாரா்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். நேரில் குறைகளை தெரிவித்தவா்களுக்கு, தபால் மூலம் பதில் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.