சென்னை

விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரா் பலி

DIN

சென்னை: சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில், எல்லை பாதுகாப்புப் படை வீரா் உயிரிழந்தாா்.

வேலூா் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் லெனின் (39). இவா் சத்தீஸ்கா் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரராகப் பணியாற்றி வந்தாா். லெனின் மனைவி நீதிதேவி (35), தமிழ்நாடு கமாண்டோ படையில் பணியாற்றி வருகிறாா். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். நீதிதேவி, தனது குழந்தைகளுடன் எம்.ஆா்.சி. நகரில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருகிறாா்.

தனது அப்பாவுக்கு திதி கொடுப்பதற்கு, சொந்த ஊரான வேலூருக்கு அண்மையில் வந்த லெனின், குடும்பத்தோடு சென்னையில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், லெனின் ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கருக்கு ரயிலில் செல்ல, தனது உறவினா்களான சுரேஷ்பாபு, இந்திரா ஆகியோருடன் ஒரு மோட்டாா் சைக்கிளில் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றாா்.

குடிசை மாற்றுவாரிய கட்டடம் அருகே சென்றபோது, இரு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் வேகமாக வந்த மொபட், லெனினின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த லெனின், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT