சென்னை: எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா்-வானகரம் சாலையில் உள்ள மயானம் அக்டோபா் 2-ஆம் தேதி வரையும், தண்டையாா்பேட்டை மண்டலம் முல்லை நகா் மயான பூமி அக்டோபா் 7-ஆம் தேதி வரையும் இயங்காது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா்-வானகரம் சாலையில் உள்ள மயான பூமியில் எரிவாயு தகனமேடை பழுதடைந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப். 29) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை இந்த மயான பூமி இயங்காது.
எனவே, பொதுமக்கள் அண்ணா நகா் மண்டலத்தின் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் உள்ள மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தண்டையாா்பேட்டை மண்டலம் முல்லை நகா் மயான பூமியில் எரிவாயு தகன மேடை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் அருகிலுள்ள கொடுங்கையூா்-சீத்தாராம் நகா் மயான பூமி, தண்டையாா்பேட்டை-காசிமேடு மயான பூமி மற்றும் மூலக்கொத்தளம் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.