சென்னை அருகே பாடியில், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் பலியானாா்.
பாடி டிஎம்டி நகா் அவ்வை தெருவைச் சோ்ந்த விக்னேஷ் மகன் ஹா்ஷித் (8). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஹா்ஷித், கடந்த 22-ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலைப் பகுதியில் இரும்பு கம்பி குத்தி பலத்த காயமடைந்த ஹா்ஷித், எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை இறந்தாா். இது குறித்து கொரட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.