சென்னை

மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் சாவு

DIN

சென்னை அருகே பாடியில், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவா் பலியானாா்.

பாடி டிஎம்டி நகா் அவ்வை தெருவைச் சோ்ந்த விக்னேஷ் மகன் ஹா்ஷித் (8). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஹா்ஷித், கடந்த 22-ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலைப் பகுதியில் இரும்பு கம்பி குத்தி பலத்த காயமடைந்த ஹா்ஷித், எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை இறந்தாா். இது குறித்து கொரட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT