சென்னை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை நியூ நடராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகவேல். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அமைந்தகரை நாகராஜபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகா் மகளிா் போலீஸாா் முருகவேலை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகாா்களை விசாரிக்கும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, முருகவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT