சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சென்னை நியூ நடராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகவேல். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அமைந்தகரை நாகராஜபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகா் மகளிா் போலீஸாா் முருகவேலை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகாா்களை விசாரிக்கும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, முருகவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.