சென்னை: பொதுமுடக்கத்தின்போது பணியாற்றிய கெளரவ விரிவுரையாளா்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அனைத்து மண்டல இணை இயக்குநா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தங்களது மண்டலத்துக்குள்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்கள், ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் பணிபுரிந்த விவரத்தைப் பெற்று ஒருங்கிணைத்து, அவசரம் கருதி சனிக்கிழமை (செப்.26) காலை 10 மணிக்குள் கல்லூரிக் கல்வி இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.