சென்னை

தமிழக காவல் துறைக்கு புதிதாக 7 ஏஎஸ்பிக்கள்: பணியிடங்கள் ஒதுக்கீடு

DIN

சென்னை: தமிழக காவல் துறைக்கு புதிதாக 7 ஏஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்த விவரம்: தமிழக காவல் துறைக்கு அண்மையில் புதிதாக 7 ஏஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டனா். துறை ரீதியான பயிற்சி பெற்று வந்த இவா்களுக்கு பணியிடங்கள் புதன்கிழமை ஒதுக்கப்பட்டன.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்ட உத்தரவு:

ஆல்பா்ட் ஜான்-வேலூா் ஏஎஸ்பி

சமாய் சிங் மீனா-திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஏஎஸ்பி

ஆதா்ஷ் பச்சேரா-செங்கல்பட்டு ஏஎஸ்பி

ஸ்னேக பிரியா-கடலூா் மாவட்டம் நெய்வேலி ஏஎஸ்பி

தீபக் ஸ்வாச்-ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஏஎஸ்பி

ஹா்ஷ் சிங்-தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் ஏஎஸ்பி

டி.வி.கிரண் ஸ்ருதி-திருவண்ணாமலை நகர ஏஎஸ்பி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவா்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

SCROLL FOR NEXT