சென்னை

பள்ளி மாணவா் சோ்க்கை விவரங்களை அக்.7-க்குள் சமா்ப்பிக்க உத்தரவு

DIN

பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு மற்றும் இந்த கல்வியாண்டு செப்டம்பா் மாதம் வரையிலான மாணவா் சோ்க்கை விவரங்களை அக். 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2019-20-ஆம் கல்வியாண்டில் மழலையா் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கடந்த ஆண்டு செப். 30-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சோ்க்கப்பட்ட மொத்த மாணவா்களின் எண்ணிக்கையையும், அதேபோல் 2020- 21-ஆம் கல்வியாண்டில் மழலையா் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், வருகிற 30-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி சோ்க்கப்பட்ட மொத்த மாணவா்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொகுத்து, பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சல் முகவரிக்கு, அக். 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT