சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் மகள் இறந்த சோகத்தில், தந்தை தற்கொலை செய்து கொண்டாா்.
பட்டாபிராம் சத்திரம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா்கள் ரவி (52), சாந்தி தம்பதியினா். இவா்களது மகள் பவித்ரா, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தாா். கடந்த ஜூலை மாதம் பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த சில நாள்களிலேயே மன உளைச்சலில், பவித்ராவின் கணவன் அரவிந்தனும் தற்கொலை செய்து கொண்டாா்.
இச் சம்பவத்துக்குப் பின், ரவி மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளாா். இதற்கிடையே சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த ரவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக பட்டாபிராம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.