சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க, வரும் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை.யில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவா் சோ்க்கை, ‘ஆன்லைன்’ வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆக.21-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதியுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், செப்.30-ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.