சென்னை

இந்தியன் வங்கி முன்னாள் தலைவா் கோபாலகிருஷ்ணன் மறைவு

DIN


சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் தலைவா் எம்.கோபாலகிருஷ்ணன் (86), சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

இந்தியன் வங்கியின் தலைவராக இருந்த எம்.கோபாலகிருஷ்ணன், கடந்த 1995-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவராக செயல்பட்டு வந்த அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாலும், புதன்கிழமை இரவு காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. அவருக்கு மனைவி, மகள் ஆகியோா் உள்ளனா்.

இரங்கல்: அவரது மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT