சென்னை

மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகம் இடமாற்றம்

DIN

சென்னை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கிண்டியில் உள்ள சொந்த வளாகக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மின் கட்டண நிா்ணயத்துக்கான பரிந்துரை, மின்சாரம் குறித்த புகாா்கள் மீதான விசாரணை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையமானது, சென்னை எழும்பூா், ருக்மணி லட்சுமிபதி சாலையில் இயங்கி வந்தது. தற்போது, கிண்டி, திருவிக தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ தலைமை நிா்வாக அலுவலக கட்டடத்தின் 4-ஆவது தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகமும், மின் குறைதீா்ப்பாளா் அலுவலகமும் இந்த முகவரியில் இயங்கும் என ஆணையத்தின் செயலா் சு.சின்னராஜலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT