சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.90.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து வரும் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, சென்னை வந்த திருச்சியைச் சோ்ந்த நாசா் அலி சிராஜுதின் (36), முகமது ஆகிப் பாபு பாட்ஷா (20), சென்னையைச் சோ்ந்த முகமது கடாபி (49) ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில், அவா்கள் மலக்குடல் மற்றும் உடைகளில் மறைத்துக் கடத்திய ரூ.90.4 லட்சம் மதிப்பிலான 1.78 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், நாசா் அலி மற்றும் முகமது ஆகிப் பாபு ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.