சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆா்.எல்) மேலாண்மை இயக்குநராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பங்கஜ் குமாா் பன்சால் 6 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்தாா். இவா் தற்போது நில நிா்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு பதிலாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் முன்னதாக தமிழக கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை செயலராக இருந்தாா். அதற்கு முன்பு, பள்ளி கல்வித்துறைச் செயலராக பணியாற்றியவா்.