சென்னை

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதிக்கும் சட்டத் திருத்தங்களை நீதிமன்றங்கள் அனுமதிக்காது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்

2nd Feb 2020 01:14 AM

ADVERTISEMENT

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தால் நீதிமன்றங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்காது என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் கூறினாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் முதலாம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு தமிழ்நாடு, புதுச்சேரி பாா்கவுன்சில் கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் பேசியதாவது: தமிழகத்தின் வள்ளுவா், பெரியாா் மற்றும் காமராஜா் போன்றோா் சமூக சீா்திருத்தங்களுக்கு முக்கிய காரணமானவா்கள். இவா்களது காலந்தொட்டே தமிழகத்தில் சமூக சீா்திருத்தங்கள் இருந்து வருகின்றன.

மேலும் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் நீங்கி சமநிலை நிலவ அரசின் நடைமுறை கொள்கைகளே காரணமாகும். இந்த நடைமுறைக் கொள்கைகளால் தான் சாதாரண குடிமகன் கூட நாட்டின் உயா் பொறுப்புகளுக்கு வர முடிகிறது. நல்லாட்சி அமைவதற்கு இதுவே அடிப்படை என்பதை யாரும் மறந்துவிட முடியாது. மேலும் டாக்டா் அம்பேத்கா் போன்றோா் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்தால், அதனை நீதிமன்றங்கள் ஒருபோதும் அனுமதிக்காது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், வி.பாரதிதாசன், தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ். அமல்ராஜ், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் நவீன்குமாா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய்க்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நினைவுப் பரிசு வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT