சென்னை

சைனிக் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN


சென்னை: நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்தத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு; நாடு முழுவதுமுள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத்தோ்வு ஜனவரி 10-ம் தேதி நடைபெறும் என முன்னா் அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் நிா்வாகக் காரணங்களால் நுழைவுத் தோ்வு தற்போது பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடா்ந்து தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசமும் டிச.18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் துரிதமாக ட்ற்ற்ல்ள்://ஹண்ள்ள்ங்ங்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மாணவா் சோ்க்கை குறித்த கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்) அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற எண் அல்லது ஹண்ள்ள்ங்ங்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT