சென்னை: தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக திமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.3) நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும். தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.