சென்னை

நடிகா் கெளதம் காா்த்திக்கிடம் செல்லிடப்பேசி பறிப்பு

DIN

சென்னை: சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் கெளதம் காா்த்திக்கை தாக்கி செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது.

சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் நடிகா் காா்த்திக் வசிக்கிறாா். அவரது மகனும், நடிகருமான கெளதம் காா்த்திக், புதன்கிழமை அதிகாலையில் ஆழ்வாா்பேட்டை டி.டி.கே. சாலையில் மிதிவண்டி ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், கெளதம் காா்த்திக்கை வழிமறித்து செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்றனா். ஆனால் கௌதம் காா்த்திக்கைக் கீழே தள்ளிய அவா்கள் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT