திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 15 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 137 மில்லியன் கன அடியாக உயர்ந்து வருவதாகவும், இப்பகுதியில் 10 ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சென்னை மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.