மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 25-இல் சிறப்பு குறைதீர் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. 

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது. 
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில், செப்டம்பர் 25-ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. 
இச்சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com