சிறுவன்  கொலை: தாய் உள்பட இருவர் கைது

சென்னை அம்பத்தூர் அருகே மூன்று வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை அம்பத்தூர் அருகே மூன்று வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அய்யப்பன்நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (24). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விட்டு பிரிந்தார். தனது மகன் கிஷோருடன் (3) சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு வ.உ.சி.நகரில் வாடகை வீட்டில் சோமசுந்தரம் என்பவருடன்  வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கிஷோர் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக புவனேஸ்வரி, தனது முதல் கணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், கிஷோரின் சடலத்தை போலீஸாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கு பட்டுக்கோட்டையில் உள்ள சகோதரி வீட்டுக்கு புவனேஸ்வரியும், சோமசுந்தரமும் கொண்டு சென்றனராம்.
இதற்கிடையே கிஷோரின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால், அது குறித்து புவனேஸ்வரியின் முதல் கணவர் குடும்பத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார், பட்டுகோட்டை காவல் நிலையம் மூலம் , கிஷோரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில், கிஷோர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து  வழக்குப் பதிவு செய்து, புவனேஸ்வரியையும், சோமசுந்தரத்தையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com