ஏபிவிபி தேசிய செயற்குழு கூட்டம்: சென்னையில் நடக்கிறது

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மே 25-ஆம் தேதி தொடங்கி  5 நாள்கள் சென்னையில் நடைபெறுகிறது. 

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மே 25-ஆம் தேதி தொடங்கி  5 நாள்கள் சென்னையில் நடைபெறுகிறது. 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அந்த அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதி கூறியது: 
ஏபிவிபியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொள்ள உள்ளனர் என்றார். 
ஏபிவிபி அகில பாரத இணை அமைப்புச் செயலாளர் லட்சுமண், மாநிலச் செயலாளர் கார்த்திகேயன்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com