அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் மே 25-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அந்த அமைப்பின் தேசிய செயலாளர் நிதி திரிபாதி கூறியது:
ஏபிவிபியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
ஏபிவிபி அகில பாரத இணை அமைப்புச் செயலாளர் லட்சுமண், மாநிலச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.