ரூ.4 கோடி நிலம் அபகரிப்பு: இருவர் கைது

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில்  இருவர் கைது செய்யப்பட்டனர்.


சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில்  இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத் ஸ்நேகாபுரியைச் சேர்ந்தவர்  நாகராஜன். இவர் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் சிலர் அபகரித்திருப்பது நாகராஜனுக்கு தெரியவந்தது.  இது குறித்து நாகராஜன், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்ததன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், இந்த அபகரிப்பில் ஈடுபட்ட ஹைதராபாத் பாகம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் (27), சென்னை, ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியைச் சேர்ந்த ஹரி (48)  ஆகியோரை  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com