தக்கர் பாபா வித்யாலயாவில் தொழிற்பயிற்சி: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் உதவித் தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்கு மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் உதவித் தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்கு மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தக்கர் பாபா வித்யாலயா சமிதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தியாகராயர் நகரில் உள்ள  தக்கர் பாபா வித்யாலயாவில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஏசி. மெக்கானிக், பெண்களுக்கான தையல் பயிற்சி, எலக்ட்ரீசியன், பிட்டர், வயர் மேன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.  இப்பயிற்சிக்கு 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 91766 24283, 89397 71592, 98413 98516, 99405 08114, 94451 25048 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com