சென்னை வேளச்சேரி நேரு நகரில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் புதைவட கேபிள் கம்பியைப் புதைக்க பள்ளம் தோண்டியபோது, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் குழாய்களுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. இதனால் நேரு நகரில் உள்ள வீட்டுக் குழாய் இணைப்புகளில் திங்கள்கிழமை துர்நாற்றத்துடன் தண்ணீர் வரத் தொடங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர், கழிவுநீர் குழாய் சேதத்தைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட நேரு நகர் பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.