யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு: சங்கர் ஐஏஎஸ் அகாதெமி மாணவர்கள் 810 பேர் வெற்றி

 யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வில் சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 810 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


 யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வில் சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 810 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி 11,845 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  
இதில் சங்கர் அகாதெமியின் மாணவர்கள் 810 பேர் குடிமைப் பணித் தேர்விலும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வனப் பணித் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். 
 குடிமைப் பணித்தேர்வின் இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வானது வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும் வனப்பணித் தேர்வின் இரண்டாம் கட்டமாக  முதன்மைத் தேர்வானது வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com