யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வில் சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 810 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி 11,845 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் சங்கர் அகாதெமியின் மாணவர்கள் 810 பேர் குடிமைப் பணித் தேர்விலும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வனப் பணித் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர்.
குடிமைப் பணித்தேர்வின் இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வானது வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும் வனப்பணித் தேர்வின் இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வானது வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.