சென்னை

மாடியிலிருந்து விழுந்து கார் ஓட்டுநர் பலி

15th Jul 2019 02:05 AM

ADVERTISEMENT

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த கார் ஓட்டுநர் இறந்தார்.
 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம் மேட்டுச் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (28) கார் ஓட்டுநர். இவர் வடபழனி பெரியார் சாலையில் உள்ள வீட்டின் 3-ஆவது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென பெரியசாமி 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT