சென்னை- கொல்லத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-கொல்லத்துக்கு மார்ச் 29-ஆம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. 


பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-கொல்லத்துக்கு மார்ச் 29-ஆம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. 
சென்னை-கொல்லம்: சென்னை எழும்பூரில் இருந்து  மார்ச் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06031) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.  மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மார்ச் 31-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சிறப்புகட்டண ரயில்(06032) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். 
இதுபோல, எர்ணாகுளம்-ஹைதராபாத், கொச்சுவேலி-ஹைதராபாத்துக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.  இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com