ரயில் மோதி பள்ளி ஆசிரியர் சாவு

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் செல்லிடபேசியில் பேசியபடி  தண்டவாளத்தைக் கடந்த பள்ளி ஆசிரியர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (50). இவர்


சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் செல்லிடபேசியில் பேசியபடி  தண்டவாளத்தைக் கடந்த பள்ளி ஆசிரியர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (50). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
புதன்கிழமை பள்ளி முடிந்து திரும்பிய அவர், பெருங்களத்தூர் ரயில்நிலையத்தில் இறங்கி செல்லிடபேசியில் பேசியபடி ரயில் தண்டவாளத்தைக் கடந்தபோது கால்தடுக்கி கீழே விழுந்தார். அப்போது மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com