ரயிலில்  தவறி விழுந்த  ஆயுதப்படை காவலர் சாவு

ரயிலில் இருந்து தவறி விழுந்த  ஆயுதப்படை காவலர்   மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.


ரயிலில் இருந்து தவறி விழுந்த  ஆயுதப்படை காவலர்   மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வைலாமூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (28). இவர் சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர் சொந்த ஊருக்கு சென்று விட்டு சேலம் விரைவு ரயிலில் திங்கள்கிழமை இரவு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை  பரனூர்-சிங்கப்பெருமாள் கோவில் இடையே வந்தபோது,   
ரயிலில் இருந்து எதிர்பாராத விதமாக  தவறி கீழே விழுந்தாராம். அதில் பலத்த காயமடைந்த  காவலர் சுபாஷை  அப்பகுதியை சேர்ந்தவர்கள்  மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  சுபாஷ் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com