சார்-பதிவாளர்கள் வீடுகளில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.5.90 லட்சம் பறிமுதல்

சென்னையில் பணிபுரியும் சார்-பதிவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.5.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பணிபுரியும் சார்-பதிவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.5.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
 சென்னை கே.கே.நகரில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
  இதன் தொடர்ச்சியாக, அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள கே.கே.நகர் சார் - பதிவாளர் பிரவீணா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர். இந்த சோதனையில், அங்கிருந்து  கணக்கில் வராத 4 சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 திருவண்ணாமலையில் உள்ள திருப்போரூர் சார்-பதிவாளர் பழனியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர். காலை முதல் மாலை வரை நீடித்த சோதனையில் அந்த வீட்டில் இருந்து ரூ.5.90 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ராயபுரம் சார்-பதிவாளர் வெங்கடேசன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com