சென்னை பெருநகர காவல்துறையில் 35 காவல் ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்:
சென்னை பெருநகர காவல்துறையில் காவல் ஆய்வாளர்கள் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில், சென்னை பெருநகர காவல்துறையில் போக்குவரத்துப் பிரிவில் 35 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதில் முக்கியமாக, எழும்பூர் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் எம்.ஜெயகுமார் கோயம்பேட்டுக்கும், நுங்கம்பாக்கத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ஜி.ஜெயவேலு செம்மஞ்சேரிக்கும், செம்மஞ்சேரியில் இருந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன் நுங்கம்பாக்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மொத்தம் 35 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.