வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது 

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 7-ஆவது தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (34)பட்டாளம் மார்க்கெட் டிமில்லர்ஸ் சாலையில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தபோது

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 7-ஆவது தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (34)பட்டாளம் மார்க்கெட் டிமில்லர்ஸ் சாலையில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தபோது இருவர் உதயகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
 இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பு பி.கே.காலனி பகுதியைச் சேர்ந்த வெற்றி (37), சுரேஷ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com