மூத்த தணிக்கையாளர் நாராயணசாமி மறைவு: அதிமுக இரங்கல் 

மூத்த தணிக்கையாளர் ஜி.நாராயணசாமி மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

மூத்த தணிக்கையாளர் ஜி.நாராயணசாமி மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-
 தமிழகத்தின் தலைசிறந்த முதுநிலை தணிக்கையாளராக விளங்கியவர் ஜி.நாராயணசாமி. அவர் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராய் செயல்பட்ட அவர், அதிமுகவின் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார். அவரது இழப்பு அதிமுகவுக்கும், சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல் என்று செய்தியில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com