கார் மோதியதில் ஒருவர் பலி

தியாகராய நகர் விஜயராகவா சாலையைச் சேர்ந்தவர் பா.சத்தியநாராயணன் (56). இவர், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து காரை வெளியை எடுத்துள்ளார்

தியாகராய நகர் விஜயராகவா சாலையைச் சேர்ந்தவர் பா.சத்தியநாராயணன் (56). இவர், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து காரை வெளியை எடுத்துள்ளார். அப்போது, அவர் வீட்டின் வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கார் மோதியது. இதில், அந்த நபர் பலத்த காயமடைந்தார். உடனடியாக சத்தியநாராயணன் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மதுபோதையில் அங்கு படுத்து தூங்கியது தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com