பராமரிப்பு பணி காரணமாக அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட வேலங்காடு இந்து மயான பூமி செப்டம்பர் 23-ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா நகர் மண்டலம் வேலங்காடு இந்து மயான பூமியில் இறந்தவர் உடலை எரிக்கும் இயந்திரத்தில் பராமரிக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை (ஆக. 23) முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை வேலங்காடு மயானம் செயல்படாது. எனவே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரும்பாக்கம் இந்து மயானபூமி மற்றும் வில்லிவாக்கம் இந்து மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.