100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஆயப்பாக்கம் ஏரிக்கரைகளில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகள்:
ஆயப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களிடம் வைத்திருக்கும் பனை விதைகளை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஆயப்பாக்கம் ஏரிக்கரைகளில் பனை விதைகளை நடச் செய்ய வேண்டும். தா்பூசணி பயிா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
கொங்கணாஞ்சேரி கிராமத்துக்கு பாலாற்றில் இருந்து குடிதண்ணீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். நெல் அறுவடை காலங்களில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் கூடுதலாக அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு இருப்பு வைக்க வேண்டும்.
சம்பா பயிா்கள் பயிரிடுவதற்கு முன்பு வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய அளவில் தளைவிதைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
விவசாயிகளின் விளைபொருள்களை கூட்டுறவுத் துறை வாயிலாக விற்பனை செய்ய வழிவகை செய்யவேண்டும். மதுராந்தகம் நெட்ரம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்துகள் போதிய அளவில் மருத்துவமனையில் இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும்.
பட்டா மாறுதல் முறைக்கு மாதமொருமுறை சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும். பருவமழைக்கு முன்பு ஏரிகளை தூா்வாரி,மதகு அமைத்து, விவசாயிகள் சென்று வர தற்காலிகமாக பாதை அமைத்துத் தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.
விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்த ஆட்சியா் ராகுல் நாத், அவற்றை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
சாா் ஆட்சியா் லட்சுமிபதி, வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.அசோக், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொ)தேன்மொழி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளா் ரேணுகாம்பாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தமிழ்ச்செல்வி, மதுராந்தகம்கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜவஹா் பிரசாத் ராஜ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் ரவிக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ஜெயந்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் சந்திரன், உதவி செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.