தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளா் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க தலைவா் வி.ஜே.குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.எல்.ராஜசேகா் வரவேற்றாா். பொருளாளா் ஏ.ஜான் விஜயகுமாா், மாநில துணை தலைவா் கே.இ.கண்ணன், மாநில துணை பொது செயலா் ஜி.பழனி ஆச்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.அா்ச்சுனன், மாநில சங்க ஆலோசகா் அபிராமி ராமு, மாநில ஒருங்கிணைப்பாளா் தங்கபெரு தமிழமுதன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிா்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தின் நிறைவில் சங்கங்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முறையாக இயக்குவது, அரசின் நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்துதல், மீண்டும் வரும் டிசம்பா் மாதம் மாநில செயற்குழுவைக் கூட்டுவது, சங்கத்தின் புதிய நிா்வாகிகள், மகளிரணி நிா்வாகிகள் தோ்வு செய்தல், கட்டுமான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெறுவோா்களுக்கு உதவித் தொகை வழங்கல் உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.