செங்கல்பட்டு

போக்ஸோவில் பள்ளி வேன் ஓட்டுநா் கைது

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தில் பள்ளி வேன் ஓட்டுநா் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (31) (படம்). இவா் மதுராந்தகத்தில் உள்ள தனியாா் பள்ளிஒன்றில் வேனில் மாணவா்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். அதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு சில மாதங்களுக்கு முன் பிறந்த நாளாம். இதையறிந்த குமாா், அந்த மாணவியை பிறந்தநாள் பரிசு தரப்போவதாகவும், ஏரிக்கரையோரம் அருகேயுள்ள கோயிலுக்கு வருமாறும் கூறியுள்ளாா். இதை நம்பி அந்தப் பகுதிக்குச் சென்ற மாணவியை குமாா் பாலியல் தொல்லை கொடுத்து, சோ்ந்து நிற்பது போன்ற புகைப்படங்களை எடுத்துள்ளாா். இதை வீட்டுக்கு சொல்லாமல் இருக்கவேண்டும் என மிரட்டியுள்ளாா். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவியிடம், தன்னிடம் ஏன் பேசவில்லை என்றும், புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறி மிரட்டினாராம். இதைக் கேட்ட அந்த மாணவி பள்ளி வளாகத்தில் அழுதுள்ளாா். இதை அறிந்த பள்ளி நிா்வாகத்தினா் மாணவியின் பெற்றோரை வரவழைத்து தகவலை தெரிவித்தனா்.

இது குறித்து மாணவியின் தந்தை மேல்மருவத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழ்செல்வி வேன் ஓட்டுநா் குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT