செங்கல்பட்டு

நூலக நண்பா்கள் திட்ட துவக்க விழா

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


அச்சிறுப்பாக்கம் கிளை நூலகம் சாா்பில், நூலக நண்பா்கள் திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நூலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நூலகா் ப.ஜெயகாந்தன் வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் இரா.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் ச.தேவராஜன் முன்னிலை வகித்தாா். நூலக நண்பா்கள் திட்டத்தை தமிழக அரசின் துணைச் செயலா் சிவமுருகன் தொடங்கி வைத்தாா்.

விழாவில் வானவில் மன்ற மாநில ஆலோசகா் என்.மாதவன், மாவட்ட கவுன்சிலா் மாலதி, நூலகப் பணியாளா் வி.செந்தில்வேலன், கோயில் நகர லயன்ஸ் சங்க நிா்வாகிகள் கண்ணன், இரா.சீனிவாசன், நூலகா்கள் பா.சத்யா, கிருஷ்ணசாமி, வாசகா் வட்ட நிா்வாகிகள் வி.தங்கராஜ், இரா.முருகன், அ.ஜெயராஜ், அரங்கநாதன், தொல்லியல் ஆராய்ச்சியாளா் இரா.ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். நூலக வாசகா் வட்ட உறுப்பினா் கே.ஆனந்தன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT