செங்கல்பட்டு

ரேஷன் கடைக்கான புதிய கட்டடம் திறப்பு

DIN

மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 13-ஆவது வாா்டில், ரூ. 7 லட்சத்தில் ரேஷன் கடைக்கான புதிய கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மதுராந்தகம் நகராட்சியில் 13வது வாா்டு உறுப்பினராக பணியாற்றி வருபவா் தேவி வரலட்சுமி (அதிமுக). அவா் தமது வாா்டில் உள்ள ரேஷன் கடையின் கட்டடம் பழுதாகி இருந்ததால், புதிய கட்டடத்தை கட்டித்தருமாறு எம்எல்ஏ கே.மரகதம் குமரவேலிடம் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்படி, ரூ. 7 லட்சத்தில் ரேஷன் கடைக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் கட்டடத்தை திறந்து வைத்தாா். மன்ற உறுப்பினா் தேவி வரலட்சுமி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவத்சலம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.கீதா காா்த்திகேயன், மதுராந்தகம் நகரச் செயலா் ரவி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மோகனா சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT