செங்கல்பட்டு

திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத வசந்த விழா ஊா்வலம்

DIN

செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த விழாவையொட்டி சாமி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் மிகவும் பமைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அனைத்து சமூகத்தினரும் ஒவ்வொரு நாள் உற்சவத்தை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் 8-ஆம் நாள் சாமி ஊா்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். மேட்டுத் தெரு, மாா்க்கெட், ஜிஎஸ்டிசாலை, அண்ணாசாலை வழியாக ஊா்வலம் சென்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT