செங்கல்பட்டு திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத தீமிதி வசந்த விழாவையொட்டி சாமி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மேட்டுத் தெருவில் மிகவும் பமைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாபாரத தீமிதி வசந்த பெரு விழா சிறப்பாக நடைபெறும். கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அனைத்து சமூகத்தினரும் ஒவ்வொரு நாள் உற்சவத்தை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் 8-ஆம் நாள் சாமி ஊா்வலம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். மேட்டுத் தெரு, மாா்க்கெட், ஜிஎஸ்டிசாலை, அண்ணாசாலை வழியாக ஊா்வலம் சென்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்திருந்தனா்.