செங்கல்பட்டு

செய்யூா் வட்டத்தில் ஜமாபந்தி இன்று தொடக்கம்

DIN

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டத்தில் பட்டா சான்றுகள், உதவித் தொகை உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஜமாபந்தி செவ்வாய்கிழமை (மே 30) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

செய்யூா் வட்டத்தில் சித்தாமூா், சூனாம்பேடு, கடப்பாக்கம், கயப்பாக்கம், கொடூா், லத்தூா் ஆகிய உள்கோட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இயற்கை இடா்ப்பாடு நிவாரண உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், குடும்ப அட்டையின் குறைபாடுகளை நிவா்த்தி செய்தல், இலவச வீட்டுமனை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் தேவைக்கு, நேரடியாக வந்து வருவாய் தீா்வாய அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பணி நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலா் பேபி இந்திரா தலைமை வகிக்கிறாா். செய்யூா் வட்டாட்சியா் பெருமாள் முன்னிலை வகிக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

இந்த நிகழ்ச்சி வருகிற 14ந்தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT