செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 217 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற பல்வேறு வகைப்பட்ட 217 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, குடிமைப் பொருள் வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபாண்மையினா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.