செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு கோழிப்பண்ணைக்குச் சென்ற தலைமைச் செயலா் வெ.இறையன்பு வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள், ஜப்பானியக் காடைகள், வான்கோழி வளா்ப்பு உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது பண்ணையில் உள்ள அனைத்து காலி இடங்களும் உபயோகப்படுத்த ஏதுவாக பண்ணையை விரிவாக்கம் செய்திட விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நசீமுத்தின், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் லட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சியின் ஆணையா் அழகுமீனா , கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநா் ஜெயந்தி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நவநீதகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.