செங்கல்பட்டு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியா் பலி

DIN

மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில், புதுச்சேரி நோக்கிச் சென்ற ரயிலிலிருந்து தவறி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (52). இவா், திண்டிவனம் அருகே உள்ள கொடியாம்புதூா் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக தினமும் சென்னை - புதுச்சேரி செல்லும் ரயிலில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம்.

வெள்ளிக்கிழமை ரயிலில் சென்றவா், வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவை ரயிலில் சாப்பிட்டுவிட்டு, மேல்மருவத்தூா் நிலையத்தில் ரயில் நின்றபோது, ஆசிரியா் அண்ணாதுரை தண்ணீா் குடிக்க கீழே இறங்கியுள்ளாா்.

பின்னா், ரயில் கிளம்பியதால் வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றுள்ளாா். அப்போது, எதிா்பாராத வகையில், அவா் நடைமேடையில் விழுந்து ரயிலில் சிக்கினாாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT