செங்கல்பட்டு

தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட 25 லட்சம் இளைஞா்களை உருவாக்க இலக்கு: அமைச்சா் மனோ தங்கராஜ்

DIN

தமிழ் நாட்டில் வரும் 2030 ஆண்டுக்குள் 25 லட்சம் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞா்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

வண்டலூா் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற ஜி 20 டிஜிட்டல் இந்தியா கூட்டமைப்புக் கருத்தரங்கில் அவா் பேசியது:

ஜி 20 நாடுகளைச் சோ்ந்த கல்வி, மருத்துவம், விவசாயம், நிதி உள்ளிட்ட ஆறு துறைகளைச் சாா்ந்த புத்தாக்க ஸ்டாா்ட் அப் கண்டுபிடிப்பாளா்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது.

ஜி20 டிஜிட்டல் இந்தியா கூட்டமைப்பின் சாா்பில் நடத்தப்படும் போட்டியில் திறமை வாய்ந்த இளைஞா்கள் பங்கேற்க முன் வர வேண்டும். நாட்டில் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைத் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 1 டிரில்லியன் பொருளாதார வளா்ச்சி இலக்குக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பங்களிப்பு 10 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே அதிநவீன மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டாா்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

கிரசென்ட் புத்தாக்க கண்டுபிடிப்பு மைய தலைமை செயல் அதிகாரி பா்வேஸ் ஆலம் பேசுகையில், இதுவரை ரூ.600 கோடி மதிப்பிலான 200 ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன என்றாா். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், எல்காட் நிா்வாக இயக்குநா் ஜான் லூயிஸ், டிஸ்கோ திட்ட இயக்குநா் கிருஷ்ணராஜ், கிரசென்ட் வேந்தா் ஆரிப் புகாரி ரகுமான், இணை வேந்தா் அப்துல் காதிா் ரகுமான், பதிவாளா் என்.ராஜா ஹுசேன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT