காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.ர. ராகுல்நாத் கலந்து கொண்டாா்.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2023-2024-ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம் திட்டம் தயாரித்தல், அந்தியோதயா இயக்க கணக்கெடுப்புதரவுகள் மற்றும் கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டக் குழு அமைக்கப்பட்டதற்கு ஒப்புதல் பெறுவதற்காக சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆட்சியா் ராகுல் நாத் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினாா். உடன் மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூா்த்தி, செங்கல்பட்டு வட்டாட்சியா் நடராஜன், அரசு அலுவலா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.