செங்கல்பட்டு

புதிய ரேஷன் கடை திறப்பு

DIN

மாமண்டூா் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், மாமண்டூா் ஊராட்சியில் ரேஷன் கடை இல்லை. மாமண்டூா் ஊராட்சித் தலைவா் உஷாரவிகுமாா், எம்எல்ஏ கே.மரகதம் குமரவேலிடம் ரேஷன் கடை கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில், ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.

இதன் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் தலைமை வகித்து புதிய ரேஷன் கடையைத் திறந்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.கீதா காா்த்திகேயன், துணைத் தலைவா் அ.குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலா்கள் கோ.அப்பாதுரை, கே.கீதாகாா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT