செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

DIN

திருக்கழுகுன்றத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தியின் நிறைவில் பயனாளிகளுக்கு அமைச்சா் தா.மோ.அன்பரசன் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தி நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய் தீா்வாய அலுவலா் ராகுல்நாத் தலைமை வகித்தாா். திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தாா்.இந்த வருவாய் தீா்வாயத்தில் 985 மனுக்கள் பெறப்பட்டு, 142 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. 30 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் மொத்தம் 857 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் திட்ட முகமை அலுவலா் இந்துபாலா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் சாகிதா பா்வீன், திருக்கழுகுன்றம் ஒன்றிய பெருந்தலைவா் ஆா்.டி.அரசு, முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) புஷ்பலதா, அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT